செஞ்சி; செஞ்சி அடுத்த தாலுகா செத்தவரை, நல்லாண்பிள்ளைபெற்றாள் மீனாட்சி உடனுறை சொக்கநாதர் கோவிலில் உள்ள யோக சர்வேஸ்வர சனி பகவான் சன்னிதியில் சனிபெயர்ச்சி விழா நடந்தது.
அதனையொட்டி, நேற்று காலை 8:00 மணிக்கு சிவஜோதி மோன சித்தர் தலைமையில் விசஷே ஹோமம் நடந்தது. 9:00 மணிக்கு மகா பூர்ணாஹூதியும், தொடர்ந்து யோக சர்வேஸ் வரன் சனிபகவானுக்கு கலசாபிஷேகம், சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனையும் நடந்தது.உற்சவ மூர்த்தி யோக சர்வேஸ்வர சனிபகவான் பூ பல்லக்கில் கோவில் உலா நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.