வாலாஜாபேட்டை: அயோத்தியில், விரைவில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தி, ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில், நேற்று கூட்டுப்பிரார்த்தனை நடந்தது. இதில், முரளிதர சுவாமிகள், தமிழக விஸ்வ இந்து பரிஷத் துணைத்தலைவர் துளசிராம், நவசபரி கோவில் தலைவர் ஜெயச்சந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து, பாரதமாதா, ராமர், வாஸ்து, ஆஞ்சநேயர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.