பதிவு செய்த நாள்
27
ஜன
2020
10:01
சூர் அருகே, சப்பளம்மா தேவி கோவில், மாடுகள் திருவிழாவையொட்டி, நான்கு டன் ஆட்டிறைச்சியில், 15 ஆயிரம் மக்களுக்கு அசைவ விருந்து பரிமாறப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், கெலவரப்பள்ளி அணை அருகே, 200 ஆண்டு பழமையான திம்மசந்திரம் சப்பளம்மா தேவி கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் நடக்கும், மாடுகள் திருவிழா கடந்த, 21ல் துவங்கியது. கோவில் திருவிழாவின்போது, விற்பனைக்கு அழைத்து வரப்பட்ட மாடுகளை, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, தமிழகம், கர்நாடகா மாநில வியாபாரிகள் வாங்கி சென்றனர். இதனால், கோடிக்கணக்கான ரூபாய் வியாபாரம் நடந்தது. கடைசி நாளான நேற்று, சப்பளம்மா தேவிக்கு, ஆடு பலி கொடுக்கப்பட்டது. தொடர்ந்து, 65க்கும் மேற்பட்ட ஆடுகள் வெட்டப்பட்டு, கிடா விருந்து சமைக்கப்பட்டது. அதேபோல், ஒன்றரை டன் கோழி உட்பட மொத்தம், நான்கு டன் அளவுக்கு இறைச்சி தயார் செய்யப்பட்டு, கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த, 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு, நேற்றிரவு வரை தொடர்ந்து அசைவ விருந்து பரிமாறப்பட்டது. விழா நிறைவாக, 45க்கும் மேற்பட்ட பல்லக்கு ஊர்வலம் மற்றும் குருஷேத்திரம் என்ற தெலுங்கு நாடகம் நடந்தது. ஏற்பாடுகளை, கஜேந்திரமூர்த்தி, தியாகராஜ், அமரேஷ் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.