பதிவு செய்த நாள்
28
ஜன
2020
12:01
மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில், கடல் மட்டத்தை உணர்த்தும், கடற்கரைக் கோவிலில் உள்ள பழங்கால கிணறை பார்த்து, பயணியர் வியக்கின்றனர்.
மாமல்லபுரம், கடற்கரைக் கோவில் வளாகத்தில், கோவிலை ஒட்டி, பழங்கால கிணறு, குறுகிய விட்டத்துடன் அமைந்துள்ளது. கி.பி., 7ம் நுாற்றாண்டில், கோவில் கட்டுமான பணி, சுவாமி அபிஷேக தீர்த்த தேவை கருதி, இதை அமைத்திருக்கலாம் என, கருதப்படுகிறது. இப்பகுதியை, 20 ஆண்டுகளுக்கு முன், அகழாய்ந்தபோது, தற்கால நிலமட்டத்தின்கீழ், பாறைவெட்டு கற்களில், படிகளுடன் அமைந்த, தொட்டி அமைப்பு கண்டறியப்பட்டது. மைய பகுதியில், நிலத்தடி கிணறும் உள்ளது. கடலில் நீர்மட்டம் உயர்ந்தால், கிணற்றில் நீரூற்று அதிகரித்து, மேற்பரப்பு வரை உயரும். கடலில் நீர்மட்டம் குறைந்தால், கிணற்றிலும் குறையும். கோவிலை பார்வையிடும் பயணியரிடம், சுற்றுலா வழிகாட்டிகள், இது குறித்து விளக்க, அவர்கள் வியக்கின்றனர்.