தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோவில் வளாகத்தில் குவிந்து கிடக்கின்றன குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேனி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலமாக தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் விளங்குகிறது. அமாவாசை பவுர்ணமி மற்றும் வாரநாட்களில் பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்து செல்கின்றனர். வருகின்ற பிப்ரவரி 21ஆம் தேதி மாசி மகா சிவராத்திரி திருவிழா துவங்க உள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு திருவிழாவின்போது பக்தர்கள் செலுத்திய தீச்சட்டி மற்றும் பூமாலைகள் கோயில் வளாகத்தில் குப்பைகள் போல் குவிந்து கிடக்கின்றது. எனவே மாசி மகா சிவராத்திரி திருவிழா துவங்குவதற்கு முன்பாக மூங்கிலனை காமாட்சியம்மன் கோயில் வளாகத்தில் குவிந்து கிடைக்கின்ற குப்பைகளை அகற்ற கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.