பதிவு செய்த நாள்
29
ஜன
2020
01:01
ப.வேலூர்: பாண்டமங்கலம், பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி திருக்கோவில் திருத்தேர் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ப.வேலூர் அடுத்த, பாண்டமங்கலத்தில் பிரசித்தி பெற்ற வெங்கட்ரமண சுவாமி திருக்கோவில் உள்ளது. இக்கோவிலின் திருத்தேர் திருவிழா, கடந்த, 24 காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும், 30 காலை, 8:00 மணிக்கு மேல் பல்லக்கு உற்சவம், மாலை, 6:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், இரவு, 7:00 மணிக்கு புஷ்ப விமானத்தில் சாமி புறப்பாடு நடைபெற உள்ளது. ஜன., 31ல் குதிரை வாகனத்தில் சுவாமி திருவீதி உலா, பிப்.,1 அதிகாலை, 4:00 மணிக்கு மேல், 5:30 மணிக்குள் சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளுல், மாலை, 4:00 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நடைபெறுகிறது. பிப்., 2ல் வராஹபுஷ்கரணியில் தீர்த்தவாரி சக்கராஸ்நானம், 3ல் வசந்த உற்சவம், 4ல் புஷ்ப யாகம், 5ல் சுவாமி புறப்பாடு நடக்கவுள்ளது. ஏற்பாடுகளை, கோவில் செயல் அலுவலர், தக்கார் மற்றும் ஊர் மக்கள் செய்து வருகின்றனர்.