பதிவு செய்த நாள்
30
ஏப்
2012
10:04
திருப்பரங்குன்றம்: மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க, சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, தாரை வார்த்துக் கொடுக்க பவளக்கனிவாய் பெருமாள் நாளை திருப்பரங்குன்றத்தில் இருந்து புறப்பாடாகின்றனர். மீனாட்சி சுந்தரேஸ்வரர் அம்மன் திருக்கல்யாணம் மே 2ல் நடக்கிறது. அதில் பங்கேற்க, நாளை(மே 1) மாலை திருப்பரங்குன்றம் கோயிலில் இருந்து சுப்பிரமணிய, தெய்வானை, பவளக்கனிவாய் பெருமாள் புறப்பாடாகி, மே 2 அதிகாலை, மீனாட்சி அம்மன் கோயிலில் எழுந்தருளுவர். மீனாட்சி சுந்தரேஸ்வரர், பிரியாவிடை சித்திரை வீதியில் பட்டிணபிரவேசம் முடிந்து, சந்திப்பு நிகழ்ச்சி நடக்கும். திருக்கல்யாணத்தில் பங்கேற்று, மே 4ல் மதுரை சுவாமிகளிடம், திருப்பரங்குன்றம் சுவாமிகள் விடைபெறும் நிகழ்ச்சி நடக்கும். மே 5 காலையில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை மதுரை கோயிலில் இருந்து புறப்பாடாகி, தெற்காவணி மூல வீதியில் உள்ள மண்டபத்தில் எழுந்தருளி, மாலையில் பூ பல்லக்கில் புறப்பாடாகி, மதுரை கோயிலில் பவளக் கனிவாய் பெருமாளை அழைத்துக்கொண்டு திருப்பரங்குன்றம் கோயில் வந்தடைவர்.