Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பச்சமலை முருகன் கோவிலில் தைப்பூச ... வேதகிரீஸ்வரர் மலை கோவிலில் பணியாளர்கள் உயர்த்தப்படுவார்களா? வேதகிரீஸ்வரர் மலை கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
லட்சுமி வெங்கடரமண சுவாமி கோவில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 பிப்
2020
11:02

ஓசூர்: மதகொண்டப்பள்ளி பிரசன்ன பாஸ்கர லட்சுமி வெங்கடரமண சுவாமி மற்றும் அங்குசகிரி திம்மராய சுவாமி கோவில் தேரோட்டத்தில், திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அடுத்த மதகொண்டப்பள்ளியில், பிரசன்ன பாஸ்கர லட்சுமி வெங்கடரமண சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் தேர்த்திருவிழா கடந்த, 1ல், ரதசப்தமி உற்சவத்துடன் துவங்கியது. கடந்த, 5ல் கொடியேற்றம் நடந்தது. நேற்று முன்தினம் அதிகாலை, 5:00 மணிக்கு, சுவாமி கல்யாணோற்சவம், காலை, 10:30 மணிக்கு கருடோற்சவம், மாலையில் உரடோற்சவம் மற்றும் கஜேந்திர மோட்சம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவின், முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், நேற்று மதியம், 12:15 மணிக்கு நடந்தது. முக்கிய நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். முக்கிய வீதிகளில் வலம் வந்த தேர், மீண்டும் நிலையை அடைந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய திரண்டதால், தளி போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். விழாவில், இன்று (பிப்., 10) பல்லக்கு உற்சவம் நடக்கிறது. வரும், 16ல், வசந்தோற்சவம் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது. சூளகிரி அடுத்த அங்குசகிரி கொத்தூர் கிராமத்தில் உள்ள, திம்மராய சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி கோவில் ரத உற்சவ விழா கடந்த, 7ல் அங்குரார்பணம் நிகழ்ச்சியுடன் துவங்கியது. விழாவில், நேற்று மதியம், 2:00 மணிக்கு, ரத உற்சவம் நடந்தது. கோவில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க, முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொங்கல் வைக்க நல்ல நேரம்: காலை 10:45 – 11:45 மணி.இப்போதெல்லாம் சூழ்நிலைகளின் காரணமாக, வீட்டுக்குள் காஸ் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: மார்கழி கிருஷ்ண பட்ச ஏகாதசி வைபவம் காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் நடந்தது.  ... மேலும்
 
temple news
கோவை; மார்கழி மாதம் ஏகாதசி திதியை முன்னிட்டு கோவை, உக்கடம் பூமி நீளா சமேத கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  தஞ்சாவூர் பெரிய கோவில் வளாக தரையில், மழைநீர் தேங்காத வகையில், இந்திய தொல்லியல் துறை ... மேலும்
 
temple news
உத்தரபிரதேசம்,ஏகாதசி மற்றும் மகர சங்கராந்தியை முன்னிட்டு, பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar