பதிவு செய்த நாள்
13
பிப்
2020
11:02
திருப்பதி:திருமலை ஏழுமலையானை தரிசித்து திரும்பும் பக்தர்களுக்கு இலவச லட்டு வழங்கும் திட்டத்தை கடந்த மாதம், 20ம் தேதி முதல் தேவஸ்தானம் செயல்படுத்தி வருகிறது. கூடுதலாக லட்டு தேவைப்படும் பக்தர்கள், ஒரு லட்டு, 50 ரூபாய் விலையில், லட்டு கவுண்டரில் பணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். கல்யாண உற்சவ லட்டு மற்றும் வடை பரிந்துரை கடிதங்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், கல்யாண உற்சவ லட்டையும், பரிந்துரை கடிதம் இல்லாமல் அளிக்க, தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதை பெற விரும்பும் பக்தர்கள், ஒரு லட்டு, 200 ரூபாய் விலையில் லட்டு கவுண்டரில் பெற்றுக் கொள்ளலாம். இது, நேற்று முதல், சோதனை முறையில் அளிக்கப்பட்டு வருகிறது. அதற்காக 10 ஆயிரம் லட்டுகள் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளன.