கடலாடி: கடலாடி அருகே மாரியூர் காந்திநகரில் உள்ள பத்திரகாளியம்மன், உச்சினமாகாளியம்மன்கோயில் கும்பாபிஷேகம்நடந்தது. கடந்த பிப்.,5 காப்புகட்டுதலுடன் விழா துவங்கியது.முதல்கால யாகசாலை பூஜைபிப்., 10ல் வாஸ்து சாந்தி, கும்பஅலங்காரம், பூர்ணாகுதி யுடன் நடந்தது. நேற்று காலை 7:00 மணிக்குவெற்றி விநாயகருக்கும், காலை 10:00 மணிக்குமூலவர் அம்மன் விமான கோபுரங்களில் சிவாச்சாரியார் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தார்.அன்ன தானம் நடந்தது. ஏற்பாடுகளை சத்திரிய இந்துநாடார் உறவின் முறையினர், எம்.காந்திநகர் மக்கள் செய்திருந்தனர்.