பதிவு செய்த நாள்
13
பிப்
2020
12:02
சோழவந்தான்: மண்ணாடிமங்கலம் முத்தையா சுவாமி கோவில் கும்பாபிஷேகம், நேற்று விமரிசையாக நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள, மண்ணாடிமங்கலத்தில் அங்காளஈஸ்வரி, ஊர்காவல்சாமி, முத்தையா சுவாமி கோவில் அமைந்துள்ளது. திருப்பணி முடிந்து, கும்பாபிஷேக ஏற்பாடுகள் நடந்து வந்தன.பரிவார தெய்வங்கள்பிப்.,10ம் தேதி, கணபதி ஹோமம் துவங்கி வாஸ்து சாந்தி, யாகசாலை பூஜைகள் நடந்தன. நேற்று காலை, நான்காம் கால யாகசாலை பூஜையை தொடர்ந்து, சிவாச்சாரியார் நாகசுப்ரமணியன் தலைமையில், கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடைபெற்றது.இதை தொடர்ந்து, மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு, சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன. அன்னதானம்உயர் நீதிமன்ற மதுரை கிளை நிர்வாக நீதிபதி துரைச்சாமி, அறநிலையத் துறை செயலர் பணீந்திர ரெட்டி, கலெக்டர் வினய், ஓய்வு பெற்ற டி.ஜி.பி., ராதாகிருஷ்ணன், ஐ.ஜி., சண்முக ராஜேஸ்வரன், மதுரை போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம், எஸ்.பி., மணிவண்ணன் பங்கேற்றனர். கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற பக்தர்களுக்கு, அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை தக்கார் செந்தில்குமார், ஆலய பூசாரி, பங்காளிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.