பதிவு செய்த நாள்
13
பிப்
2020
01:02
தர்மபுரி: சங்கடஹர சதுர்த்தியையொட்டி, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு விநாயகர் கோவில்களில், சிறப்பு பூஜைகள் மற்றும் அலங்காரங்கள் நடந்தன. சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, தர்மபுரி எஸ்.வி., ரோடு சாலை விநாயகர் கோவிலில், காலை, 6:00 மணிக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது. 7:00 மணிக்கு, மூலவருக்கு முத்தங்கி அலங்காரம் சாத்தப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து, இக்கோவிலில், விநாயகர் உற்சவர் ஊர்வலம் நடந்தது. இது, எஸ்.வி.,ரோடு, கடைவீதி, மகாத்மா காந்தி சாலை, வெளிபேட்டை தெரு, சுண்ணாம்புக்கார வீதி உள்ளிட்ட, முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலம் சென்று, மீண்டும் கோவிலை வந்தடைந்தது. இதேபோல், இலக்கியம்பட்டி சித்தி விநாயகர் கோவில், அன்னசாகரம் கோடி விநாயகர் கோவில், வெண்ணாம்பட்டி ரயில்வேகேட் குபேர கணபதி கோவில் உட்பட, மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் உள்ள விநாயகர் கோவில்களில், சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு நேற்று, விநாயகருக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேக அலங்காரங்கள் நடந்தன.