பதிவு செய்த நாள்
13
பிப்
2020
01:02
மொடக்குறிச்சி: மொடக்குறிச்சி யூனியன், காகம் பஞ்சாயத்தில் ராவுத்த குமாரசாமி, வீரமாத்தியம்மன் கோவில் கட்டட திருப்பணிகள் அண்மையில் முடிந்தன. கடந்த, 9ல் கிராமசாந்தி நடந்ததுடன், சுவாமிக்கு கணபதி ?ஹாமம், நவக்கிர ஹோமம், பூர்ணாஹூதி நடந்தது. நேற்று காலை, 6:00 மணிக்கு ராவுத்தர் குமாரசாமி, கன்னிமார் மற்றும் வீரமாத்தியம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு கும்பாபி?ஷக விழா கோலாகலமாக நடந்தது. ஆயிரக்கணக்கானோர் சுவாமியை தரிசனம் செய்தனர். பின்னர் சுவாமிக்கு தசதானம், தசதரிசனம், சிறப்பு பூஜை, தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்ததுட, பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.