சின்னசேலம்: ஆந்திரா மாநிலம், பெனுகொண்டாவில் இருந்து சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி கோவிலுக்கு கொண்டு வரப்பட்ட கும்பாபிஷேக கலசத்திற்கு சிறப்பு பூஜை நடந்தது. ஆந்திரா மாநிலம், பெனுகொண்டாவில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் வரும் மார்ச் 5ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதனையொட்டி உற்சவர் சுவாமி மற்றும் கும்பாபிஷேக கலசம் முக்கிய பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது. அதன்படி சின்னசேலம் கன்னிகாபரமேஸ்வரி கோவிலுக்கு ஆர்ய வைசியர் சமூகத்தினர் மற்றும் வாசவி வனிதா கிளப் நிர்வாகிகளால் ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட உற்சவர் சுவாமி மற்றும் கலசத்திற்கு சிறப்பு பூஜை நடந்தது. அதனையொட்டி மூலவருக்கு முத்தங்கி அலங்காரம் செய்தும், தங்கத் தேரில் உற்சவருக்கு அபிஷேகம் செய்து மகா தீபாராதனை நடத்தினர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்