கொடைக்கானல் கொடைக்கானல் அருகே உள்ள பூம்பாறை முருகன் கோவிலில் தேருக்கு வர்ணம் பூசும் பணி மும்முரமாக நடக்கிறது. பழநி முருகன் கோயில் உப கோயிலான பூம்பாறை குழந்தை வேலப்பர் கோவில் தேரோட்ட திருவிழா ஆண்டுதோறும் நடப்பது வழக்கம். இந்தாண்டு பிப்.9 ம் தேதி கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி நகர்வலம் வருதல் நடக்கிறது. பிப். 17 ல் தேரோட்டம் நடக்க உள்ள நிலையில் தேர் சீரமைக்கும் பணியை பழநி தேவஸ்தானம் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. தேர் பராமரிப்பு மற்றும் வர்ணம் பூசும் பணியில் ஏராளமான பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். பிரசித்தி பெற்ற இந்த தேர் திருவிழாவில் உள்ளூர் வாசிகள் மட்டுமின்றி வெளிநாட்டவர்களும் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.