கமுதி:கமுதி அருகே சாய்கிருஷ்ணா கோயிலில் வியாழன் பூஜை, சடைய னேந்தல் ஊராட்சி தலைவர் மல்லிகா தலைமையிலும், கோயில் அறங்காவலர் மலைச்சாமி முன்னிலையிலும் நடந்தது. சிறப்பு பூஜையில், சாய்பாபாவிற்கு நெய், தேன், இளநீர், விபூதி, பஞ்சாமிர்தம், பன்னீர் உட்பட 21 வகையான அபிஷேகங்கள் நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப் பட்டது. மாலையில் 208 விளக்கு பூஜைகள் நடத்தப்பட்டு, சிறப்பு அபிேஷகம், ஆராதனைகள் செய்யப்பட்டது.