பழநி, -பழநி முருகன் கோயிலில் மாசி மாதப் பிறப்பை முன்னிட்டு சிறப்பு யாக பூஜைகள் நடந்தது. ஆனந்த விநாயகருக்கு கும்ப கலசங்கள் வைத்து, கணபதி ஹோமத்துடன், யாக பூஜை நடந்தது. விநாயகருக்கு கலசநீர் அபிஷேகம் செய்து, லட்டு படைக்கப்பட்டது. வெள்ளிக்கவச அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். இதில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.