பதிவு செய்த நாள்
14
பிப்
2020
10:02
மயிலாடுதுறை: திருவெண்காட்டில், சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது.
நாகை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள திருவெண்காட்டில், தேவாரப் பாடல் பெற்ற, பிரம்ம வித்யாம்பாள் சமேத சுவேதாரண்யேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.இக்கோவிலில், ஆண்டு தோறும் மாசி மாதம், இந்திரப் பெருவிழா நடைபெறுவது வழக்கம்.இவ்வாண்டு, இந்திரப் பெருவிழா, 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 9ம் நாள் திருவிழாவான தேரோட்டம், நேற்று நடைபெற்றது.விநாயகர், முருகன், சுவாமி - அம்பாள் ஆகியோர் மூன்று தேர்களில் எழுந்தருளினர். ஏராளமான பக்தர்கள், வடம் பிடித்து தேர் இழுத்தனர்.சீர்காழி, டி.எஸ்.பி., வந்தனா தலைமையில், 100க்கும் மேற்பட்ட போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.