உத்தரகோசமங்கை:-உத்தரகோசமங்கையில் வராகி அம்மன் கோயிலில் 2018 பிப்.,ல் கும்பாபிஷேகம் நடந்தது.இரண்டாம் ஆண்டு வருடாபிஷேகவிழாவை முன்னிட்டு கோயில் முன்பு யாகசாலையில் விஷேச ஹோமங்கள் வளர்க்கப்பட்டு, கும்பங்களில் புனித நீர் மூலம் பூஜிக்கப்பட்டது. மூலவர் வராகி அம்மனுக்கு 18 வகையான அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு புனித நீர் ஊற்றப்பட்டது.பெண்கள் நெய் விளக்கேற்றியும், அம்மியில் விரலி மஞ்சள் அரைத்தும்வழிபாடு செய்தனர். அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை பவுர்ணமி விழாக்குழுவினர்,ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.