பாலக்காடு: செர்ப்புளச்சேரியை ஆவேசபடுத்தி புத்தனால்க்கல் பகவதி அம்மன் கோவில் திருவிழா வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டன.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் செர்ப்புளச்சேரியில் உள்ளன புகழ்பெற்ற புத்தனால் க்கல் பகவதி அம்மன் கோவில். இங்கு எல்லா அண்டும் தை மாதத்தில் திருவிழா நடப்பது வழக்கம். நடப்பண்டு திருவிழா நேற்று முன்தினம் துவங்கின. விழாவின் சிறப்பு தினமான நேற்று காலை 9 மணிக்கு பாலும் பச்சரிசி நிவேதியத்துடன் நிகழ்ச்சிகள் ஆரமித்தனை. நிக்ழச்சிகளுக்கு கோவில் தந்திரி அண்டலாடி மனக்கல் உண்ணி நம்பூதிரிபாடு தலைமை வகித்தார். தொடர்ந்து ஓட்டன் துள்ளல் கலை நிகழ்சசியும் அன்னதானம் வழங்குதலும் நடைபெற்றன. மதியம் மூன்று மணிக்கு பிறகு விழாவின் சிறப்பு அம்சமான இணைக் காளைகளின் வரவு துவங்கின. செண்டை மேளத்துடன் பல்வேறு பகுதிகளில் நின்று வந்த இணைக் காளைகளை காண ஏராளமானோர் நகர வீதிகளில் திரண்டிருந்தனர். மாலை 5 மணியளவில் வண்ண விளக்கொலியில் ஜொலித்த இணைக் காளைகள் கோவிலை நோக்கி நகர்ந்தன. செவியாட்டுவதும் தலையாட்டுவதுமான இணைக் காளைகள் பார்ப்பவர்களின் கண்களுக்கு விருந்தள்ளித்தன. 50 க்கும் மேற்பட்ட இணைக் காளைக்கள் வீதியுலா வந்தன. இதையடுத்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.