ராமேஸ்வரம் மாசி சிவராத்திரி விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14பிப் 2020 11:02
ராமேஸ்வரம்: மாசி திருவிழாவை முன்னிட்டு, ராமநாதபுரம் ராமநாத சுவாமி கோயிலில் கொடியேற்றப்பட்டு, தீபாராதனை நடந்தது. சுவாமி, அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.
ராமேஸ்வரம் கோயிலில் மாசி மகா சிவராத்திரி விழா இன்று (பிப்.14ல்) காலை 10:30 மணிக்குள் கொடியேற்றம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து கோயிலில் 10 நாட்கள் மாசி திருவிழா நடக்கிறது. மாசி சிவராத்திரியான பிப்.21 ல் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடக்கிறது. இரவு. வெள்ளி தேரில் சுவாமி, அம்மன் வீதி உலா நடக்கிறது.பிப்.22 ல் தேரோட்டம் , பிப்.,23ல் அமாவாசையில் சுவாமி, அம்மன் தங்க ரிஷப வாகனத்தில் அக்னி தீர்த்த கடற்கரையில் தீர்த்த வாரி நடக்கிறது. இதை தொடர்ந்து பக்தர்கள் புனித நீராடுவர். ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் கல்யாணி செய்து வருகிறார்.