பதிவு செய்த நாள்
14
பிப்
2020
11:02
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் பிரம்மோற்சவம், வரும், 28ம் தேதி துவங்குகிறது. இதற்காக, கோவில் சன்னிதி தெருவில், பந்தல் அமைக்கும் பணி நடக்கிறது.
காஞ்சிபுரத்தில், சிறப்பு பெற்று விளங்கும் காமாட்சி அம்மன் கோவிலில், மாசி பிரம்மோற்சவ விழா, வரும், 28ம் தேதி காலை, 4:30 மணி முதல் 6:00 மணிக்குள் கொடியேற்றத்துடன் துவங்குகிறது.முன்னதாக, 27ம் தேதி விநாயகர், வெள்ளி மூசிக வாகனத்தில், ஊர்வலம் வருகிறார். விழாவில், காலை, மாலையில், அம்மன் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி, ராஜவீதியில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். மார்ச், 10ல் விடையாற்றி உற்சவத்துடன், பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.