ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆன்மிக ஜோதி ஏற்றும் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14பிப் 2020 12:02
விழுப்புரம்:விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோடு ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில், மேல்மருவத்துார் பங்காரு அடிகளாரின் முத்து விழாவையொட்டி, நடந்த ஆன்மிக ஜோதி ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது.
விழுப்புரம் மேல்மருவத்துார் ஆதிபராசக்தி ஆன்மீக இயக்கம் சார்பில் நேற்று காலை 4:30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, காலை 6:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், மதியம் 1:00 மணிக்கு சக்திக்கொடி ஏற்றுதல், மதியம் 1:05 மணிக்கு கோ பூஜை, மதியம் 1:15 மணிக்கு கலச விளக்கு வேள்வி பூஜை நடந்தது.தொடர்ந்து, மாலை 4:00 மணிக்கு மேல்மருவத்துார் பங்காரு அடிகாளர் மகன் செந்தில்குமார் ஆன்மிக ஜோதி ஏற்றினார். பின், மாலை 4:30 மணிக்கு செந்தில்குமார், முத்து விழா சதா அபிஷேகம் செய்தார்.விழாவிற்கு, விழுப்புரம் மேல்மருவத்துார் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் மாவட்ட தலைவர் ஜெயபாலன் தலைமை தாங்கினார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.