வால்பாறை: மகா முனீஸ்வரர் சுவாமி கோயிலின்,20 ம் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. வால்பாறை கக்கன் காலனி கண்திறந்து பார்த்த மகா முனீஸ்வரர் கோயிலில் இருபதாம் ஆண்டு திருவிழா கடந்த 8ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.
தொடர்ந்து நடைபெற்ற விழாவில் நேற்று மாலை காமராஜ் நகர், சக்தி மாரியம்மன் கோவிலில் இருந்து பல்வேறு கோவிலில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித தீர்த்தம் மற்றும் சக்தி கும்பம் எடுத்து வரப்பட்டது. விழாவில் காலை 6 :00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக பூஜையும் அலங்கார பூஜையும் நடந்தது. காலை,10:30 மணிக்கு ஐயனுக்கு கெடா வெட்டு நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து மதியம்,1:00 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. வரும் 15ம் தேதி வரை நடைபெறும் விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.