முதுகுளத்துார்:முதுகுளத்தூர் பத்திரகாளியம்மன் கோயில் எதிரே உள்ள ஐயப்பன் கோயிலில் மாசி முதல் நாளை முன்னிட்டு பால், பன்னீர், சந்தனம், தேன் உள்ளிட்ட 21 வகையான அபிஷேகங்கள் நடந்தது. ஐயப்ப சுவாமிக்கு பாத பூஜை நடந்த பின் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு மற்றும் தீபாரதனைகள் நடந்தது. சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அமைந்துள்ள ஜயப்பன் கோயிலில் மாசி முதல் நாளை முன்னிட்டு பால், பன்னீர், சந்தனம், தேன் உட்பட 18 வகையான சிறப்பு அபிேஷகங்கள் நடந்தது. செல்வி அம்மன் கோயிலில் அமைந்துள்ள ஜயப்பன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்பு அன்னதானம் வழங்கப்பட்டது. முதுகுளத்துார் சுற்றியுள்ள பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.