வெள்ளகோவில்:ஓலப்பாளையம், முரு கங்காட்டுவலசு தம்பிக்கலையசாமி கோவிலில் வரும் 26ம் தேதி கும்பாபிஷேக விழா நடக்கிறது.விழாவை முன்னிட்டு நேற்று காலை ஸ்ரீ தம்பிக்கலையசாமிக்கு சிறப்பு பூஜை செய்து, யாகசாலையில் நவதானியங்கள் வைத்து பூஜை செய்யப்பட்டது.கோவில் குடிப்பாட்டுக்காரர்கள் மற்றும் பொதுமக்கள் யாகசாலை சுற்றிலும் முளைப்பாலிகை இடும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். கும்பாபிேஷக விழா ஏற்பாடுகளை கோவில் குலத்தவர்கள் செய்து வருகின்றனர்.