பதிவு செய்த நாள்
15
பிப்
2020
11:02
சத்தியமங்கலம்: ஆசனூர் மலை கும்பேஸ்வர சுவாமி கோவில் தேர்த்திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். சத்தியமங்கலத்தை அடுத்த, ஆசனூர் மலைப்பகுதியில், பிரசித்தி பெற்ற கும்பேஸ்வர சுவாமி கோவில் உள்ளது. இங்கு நடப்பாண்டு தேர்த்திருவிழா, கடந்த, ??ல் எண்ணெய் மஞ்சன சேவை, மறுநாள் சித்தூர் கும்பேஸ்வரர் சுவாமி மற்றும் ஆலமலை பிரம்மதீஸ்வர சுவாமி அழைப்பு நடந்தது. நேற்று முன்தினம் பால்குடம் ஊர்வலம் நடந்தது. இந்நிலையில் நேற்று மதியம், தேரோட்டம் நடந்தது. இதில் அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி எழுந்தருளினார். தேரோட்டத்தில் கேர்மாளம், கெத்தேசால், கோட்டாடை, மாவள்ளம், கடம்பூர், ஆசனூர் மற்றும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் சிறப்பு அலங்காரத்தில் உள்ள ஜடே ருத்ர சுவாமியை வழிபட்டனர். மறு பூஜை நாளை நடக்கிறது.