Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி பிரளயநாதர் சிவன் கோயிலில் விசாக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உலக நன்மை, காரிய வெற்றிக்காக சத்ரு சம்ஹார ஹோமம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 பிப்
2020
04:02

 சென்னை: காரிய வெற்றிக்காகவும், எல்லோரும் எல்லா நன்மைகளும் பெற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துக்காகவும், 108 நாட்கள் நடக்கும் சத்ரு சம்ஹார ஹோமம், சென்னையில் நேற்று முன்தினம் துவங்கியது.

ஸ்ரீ காமாக்ஷி மண்டலி டிரஸ்ட் சார்பில், சென்னை மேற்கு மாம்பலம் ஸ்ரீ சங்கரமடத்தில் நடக்கும், சத்ரு ஸம்ஹார ஸ்ரீ சுப்ரமண்ய த்ரிஸதீ, 108 நாட்கள் ஹோமம் நேற்று முன்தினம் தொடங்கியது. ஹோமத்தை சதுர்வேதிமங்கலம் நாராயண சாஸ்திரிகள் தலைமையில்  வேதபண்டிதர்கள் நடத்துகின்றனர்.திருமண தடை விலகல், குழந்தை பாக்யம் பெறுதல், கடன் தொல்லை நீங்குதல், வீடு மனை பாக்யம், வியாதி நீங்கி ஆரோக்யம் பெறுதல், கல்வியில் சிறந்து விளங்குதல், நல்ல உத்யோகம், வழக்குகளில் வெற்றி, குடும்ப ஒற்றுமை,  ஜாதக தோஷங்கள் விலகல், செல்வ வளம் பெருகுதல்.மேலும், அரசாங்க ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் முன்னேற்றம் காணுதல் ஆகியவற்றுக்காக நடக்கும் இந்த ஹோமத்தை விசாகப்பட்டினம், விசாகா ஸ்ரீ சாரதா பீடம் ஸ்ரீ ஸ்வரூபானந்தேந்திர சரஸ்வதி  தொடங்கி வைத்தார்.துவக்க நிகழ்ச்சியில், விஸ்வ இந்து பரிஷத் தமிழ்நாடு தலைவர் வேதாந்தம், பொதுச் செயலாளர் ஆர்.ஆர். கோபால்ஜி, திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு சிறப்பு அழைப்பாளர் சேகர் ரெட்டி ஆகியோர் பங்கேற்றனர். ஹோமத்தை துவக்கி  வைத்து, ஸ்ரீ ஸ்வரூபானந்தேந்திர சரஸ்வதி சுவாமிகள் வழங்கிய அருளாசி: இன்றைய தினம் மிகவும் மகிழ்ச்சியான நாள். ஹோமத்தை துவக்கி வைக்க, கோபால்ஜி என்னை அழைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. விசாகா ஸ்ரீ சாரதா பீடம் உலகம் அறிந்தது. மிகவும் சக்தி  வாய்ந்த, தவ வலிமை வாய்ந்த பீடமாக அது திகழ்கிறது. அந்த பீடத்தில் சுப்ரமணிய சுவாமியை உபாசனம் செய்யும், பீடாதிபதியாக நான் இங்கு வந்துள்ளேன்.தொடர்ந்து, 108 நாட்கள் சுப்ரமணிய சுவாமியின் ஆராதனை, கோபால் ஜி தலைமையில் சிறப்பாக நடக்கும்.  பக்தர்கள் தினமும் வந்து மன மகிழ்ச்சியுடன், ஹோமத்தில் பங்கேற்க வேண்டும்.

இந்த அதிர்ஷ்டத்தை யாரும் தவறவிடக் கூடாது. ஹோமம் குறித்த நன்மைகளை எல்ேலாருக்கும் எடுத்துரைத்துக்க வேண்டும். நாடு நன்றாக இருக்க வேண்டும். எல்லா குடும்பங்கள் நன்றாக இருக்க வேண்டும். எல்ேலாருக்கும் எல்லா விதமான நன்மைகள் கிடைக்க  வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் இமயமலை கிரௌஞ்சமலை கனக்சௌரி கார்த்திக் சுவாமி கோயிலில் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; வைகாசி உற்சவ விழா யொட்டி ராமேஸ்வரம் கோயிலில் சுவாமி, அம்மன் தீர்த்த குளத்தை சுற்றி வலம் ... மேலும்
 
temple news
திருப்பூர்: திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி, வீரராகவ பெருமாள் கோவில் வைகாசி விசாக தேர்த்திருவிழா, 13 ... மேலும்
 
temple news
சென்னை; வடபழனி ஆண்டவர் கோவில், வைகாசி விசாக பிரம்மோற்சவ விழாவில் நேற்று பஞ்சமூர்த்திகள் புறப்பாடு ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு; சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் வைகாசி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar