பதிவு செய்த நாள்
16
பிப்
2020
04:02
சென்னை: காரிய வெற்றிக்காகவும், எல்லோரும் எல்லா நன்மைகளும் பெற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துக்காகவும், 108 நாட்கள் நடக்கும் சத்ரு சம்ஹார ஹோமம், சென்னையில் நேற்று முன்தினம் துவங்கியது.
ஸ்ரீ காமாக்ஷி மண்டலி டிரஸ்ட் சார்பில், சென்னை மேற்கு மாம்பலம் ஸ்ரீ சங்கரமடத்தில் நடக்கும், சத்ரு ஸம்ஹார ஸ்ரீ சுப்ரமண்ய த்ரிஸதீ, 108 நாட்கள் ஹோமம் நேற்று முன்தினம் தொடங்கியது. ஹோமத்தை சதுர்வேதிமங்கலம் நாராயண சாஸ்திரிகள் தலைமையில் வேதபண்டிதர்கள் நடத்துகின்றனர்.திருமண தடை விலகல், குழந்தை பாக்யம் பெறுதல், கடன் தொல்லை நீங்குதல், வீடு மனை பாக்யம், வியாதி நீங்கி ஆரோக்யம் பெறுதல், கல்வியில் சிறந்து விளங்குதல், நல்ல உத்யோகம், வழக்குகளில் வெற்றி, குடும்ப ஒற்றுமை, ஜாதக தோஷங்கள் விலகல், செல்வ வளம் பெருகுதல்.மேலும், அரசாங்க ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் முன்னேற்றம் காணுதல் ஆகியவற்றுக்காக நடக்கும் இந்த ஹோமத்தை விசாகப்பட்டினம், விசாகா ஸ்ரீ சாரதா பீடம் ஸ்ரீ ஸ்வரூபானந்தேந்திர சரஸ்வதி தொடங்கி வைத்தார்.துவக்க நிகழ்ச்சியில், விஸ்வ இந்து பரிஷத் தமிழ்நாடு தலைவர் வேதாந்தம், பொதுச் செயலாளர் ஆர்.ஆர். கோபால்ஜி, திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு சிறப்பு அழைப்பாளர் சேகர் ரெட்டி ஆகியோர் பங்கேற்றனர். ஹோமத்தை துவக்கி வைத்து, ஸ்ரீ ஸ்வரூபானந்தேந்திர சரஸ்வதி சுவாமிகள் வழங்கிய அருளாசி: இன்றைய தினம் மிகவும் மகிழ்ச்சியான நாள். ஹோமத்தை துவக்கி வைக்க, கோபால்ஜி என்னை அழைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. விசாகா ஸ்ரீ சாரதா பீடம் உலகம் அறிந்தது. மிகவும் சக்தி வாய்ந்த, தவ வலிமை வாய்ந்த பீடமாக அது திகழ்கிறது. அந்த பீடத்தில் சுப்ரமணிய சுவாமியை உபாசனம் செய்யும், பீடாதிபதியாக நான் இங்கு வந்துள்ளேன்.தொடர்ந்து, 108 நாட்கள் சுப்ரமணிய சுவாமியின் ஆராதனை, கோபால் ஜி தலைமையில் சிறப்பாக நடக்கும். பக்தர்கள் தினமும் வந்து மன மகிழ்ச்சியுடன், ஹோமத்தில் பங்கேற்க வேண்டும்.
இந்த அதிர்ஷ்டத்தை யாரும் தவறவிடக் கூடாது. ஹோமம் குறித்த நன்மைகளை எல்ேலாருக்கும் எடுத்துரைத்துக்க வேண்டும். நாடு நன்றாக இருக்க வேண்டும். எல்லா குடும்பங்கள் நன்றாக இருக்க வேண்டும். எல்ேலாருக்கும் எல்லா விதமான நன்மைகள் கிடைக்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.