Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நடராஜர் கோவிலில் பக்தர்களை கவரும் ... ஆனந்தவல்லி சோமநாதர் கோயிலில் 251 திருவிளக்கு பூஜை ஆனந்தவல்லி சோமநாதர் கோயிலில் 251 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளஹஸ்தி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
காளஹஸ்தி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவக்கம்

பதிவு செய்த நாள்

17 பிப்
2020
11:02

திருப்பதி: காளஹஸ்தியில் உள்ள காளஹஸ்தீஸ்வரன் கோவில் பிரம்மோற்சவம், நேற்று காலை கண்ணப்ப கொடியேற்றத்துடன் துவங்கியது.

ஆந்திராவில் உள்ள காளஹஸ்தியில், காளஹஸ்தீஸ்வரன் கோவில் உள்ளது. இக்கோவில், வாயுலிங்க ஷேத்திரமாக புகழ்பெற்றுள்ளது.சிலந்தி, யானை, பாம்பு இணைந்து சிவனை வழிப்பட்ட ஸ்தலம் என்பதால், காளஹஸ்தி என்று பெயர் பெற்றது. அதனால், இங்கு உறையும் சிவன், காளஹஸ்தீஸ்வரன் என்று அழைக்கப்படுகிறார்.இக்கோவிலில், ஆண்டுதோறும், மகாசிவராத்திரியை முன்னிட்டு, வருடாந்திர பிரம்மோற்சவம் நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து, இரண்டு வாரங்கள் நடக்கும் இந்த உற்சவத்தை காண, பக்தர்கள் இங்கு கூடுவர்.

அதன்படி, நேற்று, இக்கோவிலில் பிரம்மோற்சவம் துவங்கியது. அதற்கு அடையாளமாக மாலை, 4:00 மணிக்கு, கண்ணப்ப மலை மேல் உள்ள கொடிமரத்தில், முதலில் கொடி ஏற்றப்பட்டது.சிவன் மேல் இருந்த அபரிமிதமான பக்தியால், கண்ணப்ப நாயனார், தன் கண்ணையே பிடுங்கி சிவனுக்கு வைத்த பெருமை பெற்றவர். அதனால், அவர் சிவனின் முதல் பக்தனாக இன்றும் போற்றப்பட்டு வருகிறார்.எனவே, அவரின் பக்தியை நினைவுகூரும் விதம், முதலில் கண்ணப்ப மலையில் கொடியேற்றம் நடந்து வருகிறது. இதில், கோவில் அதிகாரிகள், பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். பிரம்மோற்சவம் துவங்கியதை முன்னிட்டு, கோவில் வளாகத்தில் மலர் அலங்காரங்களும், மின் விளக்கு அலங்காரங்களும் செய்யப்பட்டுள்ளன.மேலும் வாகன சேவையின் போது உற்சவமூர்த்திகளுக்கு அலங்கரிக்கும் ஆபரணங்கள் அனைத்தும் வங்கியிலிருந்து கோவிலுக்கு பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டுள்ளன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஈரோடு; சத்தியமங்கலம் பண்ணாரி மாரியம்மன்கோவிலில் குண்டம் விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. விரதம் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோவிலில் வசந்த உற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று தங்கத் தேரோட்டம் ... மேலும்
 
temple news
மயிலம்: மயிலம் முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழாவில் வள்ளி தெய்வானை சுப்ரமணிய சுவாமிக்கு ... மேலும்
 
temple news
திருப்புவனம்: திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் -சவுந்தரநாயகி அம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
மகாவீர் ஜெயந்தி என்பது சமண மதத்தின் 24வது மற்றும் கடைசி தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரரின் பிறப்பைக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar