பதிவு செய்த நாள்
17
பிப்
2020
12:02
வால்பாறை: அண்ணாநகர், காளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி நடந்த திருக்கல்யாணத்தில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். வால்பாறை, அண்ணாநகர் காளியம்மன், கருப்புசாமி கோவில் திருவிழா கடந்த, 10ம்தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் நேற்று முன் தினம், காலை, 5:00 மணிக்கு கணபதி ஹோமமும், 6;00 மணிக்கு, அபிஷேக பூஜையும், 8:00 ம ணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது. காலை, 12:30 மணிக்கு, அம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது. அதனை தொடர்ந்துநடை பெற்ற அன்னதான விழாவை, முன்னாள் நகராட்சித்தலைவர் கணேசன் துவக்கி வைத்தார். விழாவில், நுாற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு, 7:00 மணிக்கு நடுமலை ஆற்றிலிருந்து, பக்தர்கள் பூச்சட்டி ஏந்தி ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர்.