விழுப்புரம் : விழுப்புரம், கீழ்பெரும்பாக்கம் பகுதியில் உள்ள அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஐந்தாம் ஆண்டு மயானக் கொள்ளை விழா நடந்தது. விழாவையொட்டி, நேற்று காலை 11:00 மணிக்கு ஸ்ரீ கிருஷ்ணன், அங்காளம்மன், பாவாடைராயன், குறவன், குறத்தி, காளி, காட்டேரி வேடம் அணிந்து அங்குள்ள முக்கிய வீதிகளில் வீதியுலா நடந்தது.தொடர்ந்து, மதியம் 2:00 மணிக்கு கீழ்பெரும்பாக்கம் மயானத்தில் மயானக் கொள்ளையும், பின் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. இதையடுத்து வரும் 23ம் தேதி இரவு 7:00 மணிக்கு கும்பம் கொட்டுதல் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை அப்பகுதி பொதுமக்கள் செய்திருந்தனர்.