பதிவு செய்த நாள்
18
பிப்
2020
11:02
ஈரோடு: கருப்பராயன் கோவில் உட்பட ஹிந்து கோவில்களை காக்க கோரி, புஞ்சை புளியம்பட்டி, ஹிந்து முன்னணி ஒன்றிய தலைவர் ஆனந்த் தலைமையில், ஈரோடு டி.ஆர்.ஓ., கவிதாவிடம், நேற்று மனு கொடுத்து,முறையிட்டனர். மனுவில் கூறியிருப்பதாவது: புஞ்சை புளியம்பட்டி பகுதி, பனையம்பள்ளி துண்ட கருப்புராயன் கோவிலில், மதம் மாறிய கிறிஸ்தவர்கள், கோவிலை சேதப்படுத்தி, ஹிந்துக்களை கேவலமாக பேசியும், எழுதியும் ஒற்றுமையை குலைக்கின்றனர். கோவிலின் பூட்டை அடிக்கடி உடைத்து, அப்பகுதியில் பல கோவிலை சேதப்படுத்தி வருகின்றனர். அங்குள்ள சில ஜெபவீடுகள், அனுமதியின்றி செயல்படுவதுடன், பிற மதத்துக்கு எதிராக சட்டத்துக்கு புறம்பான செயல்களை செய்கின்றனர். புஞ்சை புளியம்பட்டி போலீசில் புகார் கொடுத்ததால், புகார் கொடுத்தவர்கள் மற்றும் ஹிந்து முன்னணி அமைப்பினர் வீடுகளுக்கு, கொலை மிரட்டல் விடுக்கின்றனர். உரிய நடவடிக்கை எடுப்பதுடன், கோவிலை சேதப்படுத்தியவர்களை கைது செய்ய வேண்டும். மத மோதலை தடுக்க, அனுமதியற்ற ஜெபவீடுகளை அகற்ற வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.