பதிவு செய்த நாள்
18
பிப்
2020
11:02
வாரணாசி: மூன்று ஜோதிர்லிங்க தலங்களை இணைக்கும், காசி மஹாகாள் எக்ஸ்பிரஸ் ரயிலில், சிவபெருமானுக்கு இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது, பக்தர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள காசி விஸ்வ நாதர் கோவில், மத்திய பிரதேசத்தின் இந்துாரில் உள்ள ஓம்காரஷே்வர் கோவில், உஜ்ஜயினியில் உள்ள மஹாகாளஷே்வர் கோவில் ஆகிய, மூன்று ஜோதிர்லிங்க தலங்களையும் இணைக்கும் எக்ஸ்பிரஸ் ரயிலை, பிரதமர் மோடி நேற்று துவங்கி வைத்தார்.
அந்த ரயிலில் காசி துவங்கி, உஜ்ஜயினி வரை பயணிக்க, 1,951 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.சிறப்புமிக்க அந்த ரயிலில், தற்போது சிவபெருமானுக்காக ஒரு இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. 64 வடிவங்களைக் கொண்ட சிவனுக்காக, பி - 5 பெட்டியில், 64வது இருக்கையை, ரயில்வே நிர்வாகம் ஒதுக்கி உள்ளது. சிவனின் படங்கள், பூக்கள், காகித மாலைகள் ஆகியவற்றுடன், அந்த இருக்கை, சிறிய கோவில் போல காட்சியளிக்கிறது. ரயிலில், சிவனே இருப்பதாக எண்ணுவதால், அதில் பயணிப்போருக்கு, சைவ உணவுகளை மட்டுமே வழங்க, ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துஉள்ளது.