கண்டாச்சிபுரம் : விழுப்புரம் அடுத்த கெடார் முத்தாலம்மன் கோவிலில் நேற்று முன்தினம் இரவு தெப்பல் உற்சவம் நடந்தது. முன்னதாக, நேற்று முன்தினம் காலை அம்மனுக்கு சிறப்பு தீபாரதனை நடந்தது. இரவு 7:00 மணியளவில் உற்சவ மூர்த்தி முத்தாலம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், தீபாரதனையும் நடந்தது. தொடர்ந்து சுவாமி வீதியுலா நடந்தது. நள்ளிரவு 12:00 மணி அளவில் தெப்பல் உற்சவம் நடந்தது.இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.