பதிவு செய்த நாள்
19
பிப்
2020
10:02
திருத்தணி : திருத்தணி, முருகன் கோவிலில், மாசி மாத பிரம்மோற்சவ விழா, வரும், 27ம் தேதி துவங்கி, அடுத்த மாதம், 9ம் தேதி வரை நடைபெறுகிறது.
திருத்தணி, முருகன் கோவிலில், ஆண்டுதோறும் மாசி பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக நடந்து வருகிறது.பன்னிரன்டு நாட்கள் நடக்கும் இவ்விழாவில், உற்சவர் முருகப் பெருமான், வள்ளி, தெய்வானை உடன், தினமும், ஒரு வாகனத்தில் காலை, மாலை என, இரு வேளைகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.அந்த வகையில், இந்தாண்டின் பிரம்மோற்சவ விழா, வரும், 27ம் தேதி விநாயகர் வீதியுலாவுடன் துவங்குகிறது.மறுநாள், காலை, 7:30 மணிக்கு கொடியேற்றம் நிகழ்ச்சி நடக்கிறது. அடுத்த மாதம், 5ம் தேதி தேரும், 6ம் தேதி நள்ளிரவில், குதிரை வாகனத்தில் வந்து வள்ளி திருக்கல்யாணம் உற்சவம், 8ம் தேதி, கொடி இறக்கம், 9ம் தேதி சப்தாபரணம் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.