புதுச்சேரி: பஞ்சவடீ பஞ்சமுக ஆஞ்ஜநேயருக்கு வரும் 22ம் தேதி ஆயிரம் லிட்டர் பால் அபிஷேகம் நடக்கிறது.
புதுச்சேரி – திண்டிவனம் சாலையில் உள்ள பஞ்சவடீ கோவிலில் உள்ள 36 அடி உயர ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்ஜநேயர் சுவாமிக்கு, வரும் 22ம் தேதி காலை 8:00 மணிக்கு ஆயிரம் லிட்டர் பால் மற்றும் வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. மேற்படி பூஜைகள் அனைத்தும் பஞ்சமுக ஜெயமாருதி சேவா டிரஸ்டின் மூலமாக நடத்தப்படுகிறது. பூஜையில் பங்கேற்க விரும்புவோர், பஞ்சமுக ஜெயமாருதி சேவா டிரஸ்டின் அனுமதி பெற்ற பின் கலந்து கொள்ளலாம். இந்த சிறப்பு பூஜைகளில் பங்கேற்கும் பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட உள்ளது. இத்தகவலை பஞ்சமுக ஜெயமாருதி சேவா டிரஸ்டின் நிர்வாக அறங்காவலர் கோதண்டராமன் தெரிவித்துள்ளார்.