செஞ்சி: மொடையூர் ஜெயநாத ஈஸ்வரர் கோவிலில் குரு பூஜை விழா நடந்தது. செஞ்சியை அடுத்த மொடையூர் கிராமத்தில் உள்ள ஞானசவுந்தரி உடனுறை ஜெயநாத ஈஸ்வரர் கோவிலில் திருத்தொண்டர் காரி நாயனார் குருபூஜை விழா நடந்தது.
ஜெயநாதர், ஞானசவுந்தரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்தனர். மாலை 5 மணிக்கு குருபூஜையை முன்னிட்டு சிறப்பு வேள்வி நடந்தது. இதில் வட புத்தூர் இளஞ்செழியன் அடிகளார் தலைமையிலான குழுவினர் தமிழில் வேத மந்திரம் ஓதி வேள்வி நடத்தினர். தொடர்ந்து கலச அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.