கூத்தாடி அம்மன் கோயில் விழா நாளை பக்தர்களுக்கு பூ வழங்கல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21பிப் 2020 10:02
தேவகோட்டை: தேவகோட்டை எல்லையில் உள்ளது தாழையூர். இங்கு கண்மாய் கரையோரம் உசிலையுடைய அய்யனார் கோவில், கூத்தாடி முத்து பெரியநாயகி அம்மன் கோவில் உள்ளது. புதன் ,சனிக்கிழமை ஏராளமானோர் அம்மனை வணங்கி செல்வர். இந்த அய்யனார் கோவிலில் நாடகத்திற்கு வந்த சிறு பெண்ணே கூத்தாடி முத்துபெரியநாயகியாக இருந்து அருள் பாலிக்கின்றார். சிவராத்திரியை முன்னிட்டு இக்கோவிலில் அய்யனாருக்கும், அம்மனுக்கு இரவு நான்கு கால சிறப்பு பூஜை நடக்கும். மறுநாள் சுற்றுப்புற கிராமங்களிலிருந்து காவடி,பால்குடம் எடுத்து வந்து பக்தர்கள் வழிபடுவர். அய்யனாருக்கு சிறப்பு அபிேஷகம் நடைபெறும். அம்மனுக்கு ஜவ்வாது உட்பட வாசனை திரவியங்கள் சாற்றப்பட்டு நகைகள் மற்றும் வெள்ளி அங்கி சாற்றப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபடும் இக்கோவிலில் சிவராத்திரிக்கு மறுநாள் மட்டுமே பக்தர்களுக்கு அம்மனுக்கு அணிவிக்கப்பட்ட பூ. பிரசாதமாக வழங்கப்படும். மற்ற நாட்களில் பூ அணிவித்து வழிபட்டாலும் பக்தர்களுக்கு பூ வழங்கப்படாது. இத்திருவிழா நாளை 22 ந்தேதி நடக்கவுள்ளது.