பதிவு செய்த நாள்
21
பிப்
2020
10:02
மானாமதுரை: ஹிந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் கடவுளை வணங்கி வரும் நிலையில் மனிதனாக வாழ்ந்து மகான்களாகவும், சித்தர்களாகவும் மறைந்த 18 சித்தர்களான அகத்தியர், போகர், திருமூலர், வான்மீகர், தன்வந்திரி, இடைக்காடர், கமலமுனி, கருவூரார், கொங்கணர், கோரக்கர், குதம்பை, மச்சமுனி, பாம்பாட்டி, பதஞ்சலி, ராமத்தேவர், சட்டைமுனி, சிவவாக்கியர், சுந்தரானந்தர் ஆகியோர்களை ஏராளமானவர்கள் இன்றளவும் வழிபட்டு வருகின்றனர்.இந்த சித்தர்களில் பெரும்பாலானோர் வைத்தியத்தில் சிறந்து விளங்கி சில நோய்களுக்கு கூட மூலிகை மருந்து கண்டுபிடித்து காப்பாற்றி உள்ளனர். அதனால் தான் நமது முன்னோர்கள் சித்த வைத்தியத்தின் அற்புதங்களை தெரிந்து கொண்டு அவற்றின் மூலம் தற்போதுள்ள நோய்களுக்கு கூட மருந்து கண்டுபிடித்து வருகின்றனர்.இந்நிலையில் தஞ்சாக்கூரில் சகலகுருநாதர் என்ற சித்தர், முருகன் கோயிலுக்கு அருகில் ஜீவசமாதி அடைந்துள்ளார்.இந்த சித்தர்களுக்கு மானாமதுரை அருகே உள்ள தஞ்சாக்கூரில் முருகன் கோயிலை சுற்றி சிலைகள் அமைத்து கோயில் கட்டி வழிபாடு செய்து வருகிறார் தஞ்சாக்கூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பாலசுப்பிரமணியன்60.அவர் கூறியதாவது: எங்களது மூத்த தலைமுறையினர் தஞ்சாக்கூரில் முருகன் கோயிலில் பூஜாரியாக இருந்துள்ளனர். தற்போது நான் அந்த கோயிலில் பூஜை செய்து வருகிறேன். சித்தர்களின் அருளை பெறவும், உலக மக்களின் நன்மைக்காகவும்,நோய் இல்லாமல் வாழ முருகன் கோயிலை சுற்றி 18 சித்தர்ளுக்கும் சிலை அமைத்து அவர்களை வணங்கி வருகிறேன். சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பலரும் கோயிலுக்கு வந்து செல்கின்றனர் என்றார்.