Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உடுமலை திருப்பதி கோவிலில் லட்சுமி ... மகா சிவராத்திரி: குலதெய்வத்தை வழிபட மாட்டு வண்டியில் புறப்பாடு மகா சிவராத்திரி: குலதெய்வத்தை வழிபட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடபழநி முருகன் கோவிலில் மகா சிவராத்திரி விழா
எழுத்தின் அளவு:
வடபழநி முருகன் கோவிலில் மகா சிவராத்திரி விழா

பதிவு செய்த நாள்

21 பிப்
2020
11:02

சென்னை: வடபழநி முருகன் கோவிலில், மகா சிவராத்திரியை முன்னிட்டு, நான்கு கால பூஜைகள், பக்தி இசை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

சிவனுக்குரிய விரதங்களாக, மாத, நித்ய, யோக, மகா சிவராத்திரி என, ஆண்டு முழுவதும் பல சிவராத்திரிகள் உள்ளன. இதில், மகா சிவராத்திரி விரதம் சிறப்பானது என, புராணங்கள் கூறுகின்றன.மாசி மாதம், தேய்பிறை சதுர்த்தசி நாளையே, மகா சிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. ராத்திரி என்ற சொல்லுக்கு, அனைத்தும் செயலற்று ஒடுங்குதல் என்று பொருள்.உயிர்கள் செயலற்று, ஈசன் நினைவாக ஒடுங்கும் காலமே சிவராத்திரி. இந்த புண்ணிய காலத்தில் சிவனின் நாமம் கூறி, நான்கு கால பூஜைகள் செய்து வழிபடுவது வழக்கத்தில் உள்ளது.வடபழநி ஆண்டவர் கோவிலில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு, இன்று மாலை, 4:30 மணிக்கு மகா பிரதோஷ காலத்திலிருந்து, அன்று இரவு முழுவதும், நான்கு காலங்களிலும் சொக்கநாதருக்கு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.முதல் காலம், இரவு, 8:30 மணிக்கும், இரண்டாம் காலம் இரவு, 11:00 மணிக்கும், மூன்றாம் காலம் அதிகாலை, 1:00 மணிக்கும், நான்காம் காலம் அதிகாலை, 3:00 மணிக்கும் அபிஷேகம் நடைபெறும்.

ஒவ்வொரு கால அபிஷேக வேளையில் ருத்ர பாராயணமும், அதைத் தொடர்ந்து பஜனையும் நடைபெறுகிறது. மேலும், இரவு, 8:30 மணிக்கு புவனேஸ்வரி, சீனிவாசனின் சிவ மகிமை வேத கோஷம், வீணை பாராயணம் நடக்கிறது.இரவு, 11:00 மணிக்கு வீரமணி ராஜுவின் மகன் அபிஷேக் ராஜுவின் பக்தி இசை நிகழ்ச்சி நடக்கிறது. இரவு, 1:00 மணிக்கு சவிதா ஸ்ரீராமின் பஜன்ஸ் நடக்கிறது. முதல் கால பூஜை துவக்கத்தில் இருந்து அதிகாலை, 6:00 மணி வரை, ஒவ்வொரு மணி நேரமும் விதவிதமான பிரசாதங்கள் வழங்கப்படுகின்றன.விழாவிற்கான ஏற்பாடுகளை, கோவில் தக்கார் மற்றும் அறநிலையத்துறை துணை கமிஷனர் சித்ராதேவி ஆகியோர் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; பெரியநாயக்கன்பாளையம் குப்பிச்சிபாளையம்ரோட்டில் இருக்கும் பால தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ... மேலும்
 
temple news
குரோதி ஆண்டு சித்திரை 18 (மே1, 2024) மாலை 5:21 மணிக்கு மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு குருபகவான் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் தலத்தெரு தங்க மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் பூமாயிஅம்மன் கோயிலில் நேற்று கொடியேற்றத்துடன் வசந்தப் பெருவிழா ... மேலும்
 
temple news
செந்துறை, செந்துரை அருகே சேத்தூர் செல்வமுத்து மாரியம்மன் கோவில் திருவிழாவில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar