மதுரை; மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு இன்று இரவு முதல் நாளை அதிகாலை வரை அம்மன், சுவாமி மற்றும் உற்ஸவர் சன்னதிகளில அபிஷேகம், ஆராதனை, சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. சேவார்த்தியர்கள், பக்தர்கள் அபிஷேக பொருட்களை இன்று மாலைக்குள் கோயில் உள்துறை அலுவலகத்தில் வழங்கலாம். ஏற்பாடுகளை தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் செய்து வருகின்றனர்.