பதிவு செய்த நாள்
21
பிப்
2020
01:02
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அடுத்த சிந்தாமணி நல்லுார் தையல்நாயகி உடனுறை வைத்தீஸ்வரர் கோவிலில் இன்று மகாசிவராத்திரி விழா நடக்கிறது.
அதனையொட்டி, இன்று மாலை 5:00 மணி முதல் 6:30 மணி வரை முதல் கால பூஜையும், இரவு 10:00 மணி முதல் 11:30 மணி வரை இரண்டாம் கால பூஜையும், நள்ளிரவு 12:00 மணி முதல் அதிகாலை 3:00 மணி வரை மூன்றாம் கால பூஜையும், அதிகாலை 6:00 மணிக்கு நான்காம் கால பூஜையும் நடைபெறுகிறது.விழாவையொட்டி, இரவு முழுவதும் சொற்பொழிவு, நாடகம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது.சென்னை, புதுச்சேரி, திருவண்ணாமலை, கடலுார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் திரளாக பங்கேற்க இருப்பதால், 3,000 பேருக்கு அ.தி.மு.க., மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலர் வேலு, முன்னாள் மாவட்ட சேர்மன் அலமேலு வேலு குடும்பத்தினர் அன்னதானம் வழங்குகின்றனர்.