பதிவு செய்த நாள்
22
பிப்
2020
10:02
நகரி;நகரியில், மகா சிவராத்திரியையொட்டி, சங்கு மற்றும் பனை ஓலைகளால், நந்தி பகவான் மற்றும் சிவலிங்கம் தயாரிக்கும் பணிகள் துரித வேகத்தில் நடந்து வருகின்றன. சித்துார் மாவட்டம், நகரி அடுத்த, கீழப்பட்டு கிராமத்தில், திரிபுர சுந்தரி சமேத சந்திரமவுலீஸ்வரர் சிவன் கோவில் உள்ளது.இக்கோவில் வளாகத்தில், இன்று, மகா சிவராத்திரியையொட்டி, 2,000 பனை ஓலைகளால், நந்தி போன்ற வடிவில் பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது.அதனுள் சங்குகளால் ஏற்பாடு செய்யப்பட்ட நந்தி, சிவலிங்கம் சிலைகளுக்கு பக்தர்களே அபிஷேகம் செய்யும் விதத்தில் அமைக்கப்பட்டு வருகிறது.பனை ஓலை மற்றும் சங்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது, பக்தர்களை கவரும் வகையில் உள்ளதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.