பதிவு செய்த நாள்
22
பிப்
2020
11:02
பழநி: நேற்று மகா சிவராத்திரியை முன்னிட்டு, பழநி, கிராமப்பகுதிகளில் உள்ள சிவன்கோயில்கள், குலதெய்வ கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. பழநி மலைக்கோயில் கைலாசநாதர் சன்னதி, கோதைமங்கலம், பெரியாவுடையார் கோயில், ஆயக்குடி சோழீஸ்வரர் கோயில், அடிவாரம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம், புதுநகர் சிவன்கோயில், பெரியநாயகியம்மன் கோயில் போன்ற இடங்களில் சிவலிங்கத்துக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. இரவு முழுவதும் நடந்த பூஜைகளில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.கொடைக்கானல்: கொடைக்கானல் சங்கரலிங்கேஸ்வரர் கோயிலில் அபிஷேக, ஆராதனை மற்றும் பஜனை நடந்தது தாண்டிக்குடி ஜலகண்ட அருணாச்சலேஸ்வரர் கோயில், கொடைக்கானல் ஆனந்தகிரி பெரிய மாரியம்மன் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த அம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய் தனர். மேலும் மலைப்பகுதியில் குல தெய்வ வழிபாடுகளும், காமாட்சி அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. பண்ணைக்காடு மயான காளி அம்மன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.