சீதப்பட்டீஸ்வரர் கோவிலில் சூரிய கதிர்கள் படும் நிகழ்வு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22பிப் 2020 11:02
திருவெண்ணெய்நல்லுார் : பிரதோஷம் மற்றும் மகா சிவராத்திரியையொட்டி திருவெண்ணெய்நல்லுார் அடுத்த தென்மங்கலம் கிராமத்தில் உள்ள சீதப்பட்டீஸ்வரர் கோவிலில் நான்கு கால பூஜைகள் நேற்று இரவு துவங்கி இன்று காலை வரை நடக்கிறது. அதையொட்டி கோவிலில் உள்ள நந்தி பெருமானுக்கு நேற்று மாலை பிரதோஷ அபிஷேகம் நடந்தது. அதனைத்தொடர்ந்து இரவு, முதல் கால பூஜையாக மூலவருக்கு பால், தயிர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. இதேபோன்று நான்கு கால பூஜையும் நடந்தன.நிகழ்ச்சியின் முக்கியமான நான்காம் கால பூஜை நடைபெறும் அதிகாலை 5:00 மணிக்கு மூலவர் சீதப்பட்டீஸ்வரர் மீது சூரிய ஒளி படும் நிகழ்வு இன்று காலை நடைபெறுகிறது. வருடத்தில் நான்கு நாட்கள் மட்டுமே இக்கோவிலில் உள்ள மூலவர் மீது சூரிய ஒளி பட்டு மகா சிவராத்திரி அன்று நிறைவு பெறும் நிகழ்வு பல்லாண்டுகளாக நடந்து வருகிறது. இதனை காண எராளமான பக்தர்கள் இக்கோவிலுக்கு வந்து தரிசனம் செய்வர்.