சித்தலுார் அம்மன் கோவில் மாசித் திருவிழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22பிப் 2020 11:02
தியாகதுருகம் : தியாகதுருகம் அடுத்த சித்தலுாரில் உள்ள பிரசித்தி பெற்ற பெரியநாயகி அம்மன் கோவில் மாசித் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. சிவராத்திரி தினமான நேற்று காலை, மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. கருவறையில் உள்ள பிரம்மாண்ட புற்றுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டது. மணிமுக்தா ஆற்றில் இருந்து சக்தி கரகம் எடுத்து வரப்பட்டு சிறப்பு ஆராதனை நடந்தது.இரவு 8:00 மணிக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியைத் தொடர்ந்து கோவில் பலி பீடம் அருகே உள்ள கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டு விழா துவங்கியது. பின்னர் உற்சவர் அம்மன் சர்வ அலங்காரத்துடன் எழுந்தருளி வீதியுலா நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். வரும் 29ம் தேதி மயானக்கொள்ளை திருவிழாவும், தொடர்ந்து 1ம் தேதி தேர் திருவிழாவும் நடக்கிறது.