விழுப்புரம் : விழுப்புரம் மகாராஜபுரம் மீனாட்சி உடனுறை சுந்தரேஸ்வரர் கோவிலில், 39ம் ஆண்டு மகா சிவராத்திரி விழா நடந்தது. விழாவையொட்டி, நேற்று மதியம் 12:00 மணியளவில் சிறப்பு அபிஷேகம், மாலை 5:00 மணிக்கு முத்தால்வாழி மாரியம்மன் கோவிலிலிருந்து அபிஷேக பொருட்கள் ஊர்வலமும் நடந்தது. தொடர்ந்து, இரவு 7:00 மணிக்கு முதல் கால பூஜை, சிறப்பு அலங்காரம் மற்றும் இரவு 10:00 மணிக்கு இரண்டாம் கால பூஜை, இரவு 12:00 மணிக்கு அன்ன அபிஷேகத்துடன் மூன்றாம் கால பூஜை நடந்தது.இதை தொடர்ந்து, இன்று 22ம் தேதி அதிகாலை 5:00 மணிக்கு நான்காம் கால பூஜை நடந்தது. ஏற்பாடுகளை பொதுமக்கள் மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.