Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மஹா சிவராத்திரி சிறப்பு பூஜை: விடிய ... மயான கொள்ளையை முன்னிட்டு பூமிதி விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புவனகிரி விடங்கேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா
எழுத்தின் அளவு:
புவனகிரி விடங்கேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா

பதிவு செய்த நாள்

22 பிப்
2020
11:02

புவனகிரி: சிதம்பரம் அருகே கிள்ளைதில்லைவிடங்கன் அருள்மிகு பர்வதாம்பாள் உடனுறை விடங்கேஸ்வரர் திருக்கோவிலில் பிரதோஷ வழிபாடும் மகா சிவராத்திரி விழாவும் வெகு விமர்சியாக நடைபெற்றது. சுற்றுபகுதியினர் பெருளமவில் பங்கேற்று சுவாமிதரிசனம் செய்தனர். சிதம்பரம் அருகே கிள்ளைதில்லைவிடங்கன் கிராமத்தில் அருள்மிகு பர்வதாம்பாள் உடனுறை விடங்கேஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் வினாயகர், முருகன், மூலவரான ஈசன் உத்திராட்டை பந்தலுக்கும் கீழும், அம்மன் பார்வதாம்பாள் தெற்குத் திசை முகம் பார்த்த வண்ணமும், வடக்குத்திசை நோக்கி சமயக்குரவர்கள், நவக்கிரகங்கள் மேற்குபக்கம் பார்த்த வகையில் நேர்க்கோட்டில் உள் பிரகாரத்திலும், வெளி பிரகாரத்தில் குருபகவான், லிங்கோத்பவர்,துர்க்கை, சண்டிகேஸ்வர் மற்றும்  நவக்கிரங்கள்அருள் பாலிக்கின்றனர்.

‘காலைத்துாக்கி நின்றாடும் தெய்வம்:
என்னை கைத்துாக்கி ஆள் தெய்வமே’ என்ற வரிகளைக் கொண்ட கீரத்தனைப்பாடிய மாரிமுத்தாப்பிள்ளை பிறந்த இந்த கிராமத்தில் எழுந்தருளியுள்ள இந்த சிவன் ஸ்தலத்தில் சிவனுக்குறிய அனைத்து நிகழ்வுகளும் வெகு விமர்சியாக நடத்தி வருகின்றனர். நேற்று மாலையில் பிரதோஷ வழிபாடு நடந்தது. மகாசிவராத்திரியை முன்னிட்டு நடந்த முதல், இரண்டு, மூன்று மற்றும் நான்கு கால பூஜையில் சிதம்பரம் சுற்றுபகுதிகளைச் சேர்ந்த சிவ பக்தர்கள் பெருமளவில் பங்கேற்று
சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம், பிரசாதம் வழங்கினர். கோவில் அர்ச்சகர் ஜெகதீசன் குருக்கள் தலைமையிலான குருக்கள் பூஜைகள் நடத்தினர். ஏற்பாடுகளை பரம்பரை தர்மகர்த்தா குமார் பிள்ளை தலைமையிலான விழா குழுவினர்கள் செய்திருந்தனர். விழாவில் தியாகராஜன் பிள்ளை, சிவத்தொண்டர் கிள்ளைபுண்ணியராஜா உள்ளிட்ட குழுவினர்கள் ஆன்மிக சொற்பொழிவாற்றினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவாதிரை நடராஜரை வழிபட சிறந்த நாள் ஆகும். நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் பஞ்சபூதமாகவும் ... மேலும்
 
temple news
திருப்பதி; ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்குப் பிறகு வரும் சதுர்த்தி தினம் நகுல சதுர்த்தியாக ... மேலும்
 
temple news
பொன்னேரி; புரட்டாசியை முன்னிட்டு, தடப்பெரும்பாக்கம் லட்சுமி நாராயண பெருமாளுக்கு திருக்கல்யாண ... மேலும்
 
temple news
பழநி; திண்டுக்கல் மாவட்டம் பழநி திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயில் அர்த்தமண்டபத்திற்கு ... மேலும்
 
temple news
வால்பாறை; கோவில்களில்  நடந்த சஷ்டி பூஜையில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.வால்பாறை சுப்பிரமணிய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar