பதிவு செய்த நாள்
22
பிப்
2020
11:02
திருவாரூர் மாவட்டம், விளமலில் அருள்பாலிக்கும் பதஞ்சலி மனோகர் கோயிலில் நந்திதேவருக்கும், பதஞ்சலி மனோகரர் சுவாமிக்கும், மாசி மாத தேய்பிறை பிரதோஷம், மஹா சிவராத்திரி பூஜை சிறப்பு அர்ச்சனை, அலங்கார வழிபாடு நடைபெற்றது. நாட்டில் மக்கள் நோயற்ற வாழ்விற்கும், அமைதி தழைத்தோங்கவும், விவசாயம் செழித்தோங்கவும், சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக நந்தியம் பெருமாளுக்கு எண்ணெய் காப்பு சாற்றி, திரவியம், மஞ்சள், பஞ்கவ்யம், பால், தயிர், இளநீர், கரும்பு சாறு , தேன், பஞ்சாமிர்தம், ஸ்வர்ணம், சந்தனம், பன்னீர், திருநீர் அபிக்ஷேகம் நடைபெற்றது. சுவாமி விபூதி சர்வ அலங்காரத்தில் அருள் பாலித்தார். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் பிரசாதம் வழங்கப்பட்டது. பூஜைக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகமும், சந்திரசேகர சிவாச்சாரியாரும் சிறப்பாக செய்திருந்தனர். நேற்று இரவு 8.00 மணிக்கு முதல் கால பூஜை துவங்கி, இன்று அதிகாலை 4.30 மணிக்கு நான்காவது கால பூஜைகளுடன் விழா சிறப்பாக நடைபெற்றது.