பதிவு செய்த நாள்
22
பிப்
2020
12:02
மதுரை: மேலூர் தாலுகா, தும்பைப்பட்டி, சிவாலயபுரத்தில் அருள்பாலிக்கும் சங்கர லிங்கம் சுவாமி, கோமதி அம்மன், சங்கரநாராயணர் கோவிலில் நந்திதேவருக்கும், சங்கர லிங்கம் சுவாமிக்கும், மாசி மாத தேய்பிறை பிரதோஷம், மஹா சிவராத்திரி பூஜை சிறப்பு அர்ச்சனை, அலங்கார வழிபாடு நடைபெற்றது.
நாட்டில் மக்கள் நோயற்ற வாழ்விற்கும், அமைதி தழைத்தோங்கவும், விவசாயம் செழித்தோங்கவும், சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக நந்தியம் பெருமாளுக்கு எண்ணெய் காப்பு சாற்றி, திரவியம், மஞ்சள், பஞ்கவ்யம், பால், தயிர், இளநீர், கரும்பு சாறு , தேன், பஞ்சாமிர்தம், ஸ்வர்ணம், சந்தனம், பன்னீர், திருநீர் அபிக்ஷேகம் நடைபெற்றது. சுவாமி விபூதி சர்வ அலங்காரத்தில் அருள் பாலித்தார். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் பிரசாதம் வழங்கப்பட்டது. இன்றைய உபயதாரர்கள் கோட்டப்பட்டி திரு. இராஜ.சிவராமன் குடும்பத்தினர், ரமேஷ் அய்யர், சங்கர நாராயணர் கல்வி, அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள் பூஜைக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர். நேற்று இரவு 8.00 மணிக்கு முதல் கால பூஜை துவங்கி, இன்று அதிகாலை 4.30 மணிக்கு நான்காவது கால பூஜைகளுடன் விழா சிறப்பாக நடைபெற்றது.